அண்மையில் நான் தாயகம் சென்றிருந்த வேளையில் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணக்காப்பகம் என்னை ஓர் நேர்காணல் செய்திருந்தது. இதுவரையில் எனது வாசகர்கள் என்னைப்பற்றி அறிந்திராத தகவல்களும் இலக்கிய சங்கதிகளும் இந்த நேர்காணலின் பேசுபொருளாக இருந்தன. நேர்காணலை செய்திருந்த ஜீவநதியின் பிரதம ஆசிரியர் பரணிக்கும் மற்றும் ஆவணக்காப்பகத்துக்கும் மிக்க நன்றிகள். வாசகர்கள் பின்வரும் இணைய சுட்டியில் நேர்காணலின் ஒலிவடிவை கேட்கலாம் என்பதனை அறியத்தருகின்றேன். நன்றி .
நேசமுடன் கோமகன்
http://aavanaham.org/islandora/object/noolaham%3A13824