சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 05

வணக்கம் பிள்ளையள் கனகாலத்துக்கு பிறகு சுறுக்கன் வந்திருக்கிறன். இண்டைக்கு இருபத்தி நாலு வாரியத்துக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வந்துட்டுது எண்டு சனங்களும், இணையங்களும் ஒரே அல்லோலகல்லோலம். பாக்க பம்பலாய் இருக்கு. ஆனால் பாருங்கோ எனக்கு கொஞ்சம் டவுட்டுகள் மண்டையுக்கை டண்டணக்கா ஆடுது கண்டியளோ. அது என்னெண்டால் உண்மையிலை யாழ்ப்பாணம் சுதந்திர மண்ணாய் கிடக்கா எண்டு. இப்ப பாருங்கோ பாதுகாப்பு வலையங்கள் முழுக்க எடுபடேலை . நிழல் இராணுவ கெடுபெடியள் இன்னம் போகேலை .

இப்பவும் மகிந்தர் வாற ரெண்டு நாளைக்கும் வெளி சனங்கள் எம் ஒ டி பாஸ் எடுக்கவேணும் எண்டு படிச்சன் . இன்னும் புலிவாசம் மணக்குதோ எண்டு மூக்கை நீட்டி கொண்டு திரியிறாங்கள் . ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருக்கவேணும் எண்டமாதிரி , கிளிநொச்சியிலை நாடுகடந்த அரசாங்கம் வந்ததாய் மகிந்தர் கடுப்படிசிருக்கிறார் ( அடுத்த லிஸ்ட் றெடி ). இந்த பயங்கராவாத தடை சட்டம் என்னம் ரோட்டலாய் எடுபடேலை. அதோடை கொழும்புவாழ் டமில்சை குழுத்திப்படுத்த கல்கிசையிலை இருந்து யாழ்தேவி டிரக்ட்டாய் யாழ்ப்பாணம் வருகுது எண்ட நியூசையும் படிச்சன். உண்மையிலை எனக்கு புல்லரிக்குது கண்டியளோ.
அடுத்த லெக்சனிலை மகிந்தர் தான் எண்டது இந்த யாழ்தேவியாலை கொண்போர்ம் ஆயிட்டுது . ஆக மொத்தத்திலை மெயின் சுவிச்சுகள் ஒண்டையும் ஒண் பண்ணாமல், யாழ் தேவி எண்ட மோகினியை விட்டு சனங்களை தன்ரை பக்கம் கொண்டு வந்த மகிந்தற்ரை மண்டை எங்கடை வித்துவானுகளுக்கு இல்லை எண்டதையும் சொல்லத்தான் வேணும் பாருங்கோ. இதுக்காக சனங்கள் இப்பிடியே இருக்கவேணும் எண்டு நான் சொல்லேலை. சனங்களும் பாவங்கள் அதுகளை வைச்சு அரசியல் பண்ணுறது வெரி பாட் கண்டியளோ .சரி பிள்ளையள் என்னமொரு இடத்திலை சந்திப்பம் .
சுருக்கு சுறுக்கர்

13 October 2014

(Visited 4 times, 1 visits today)