நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-இறுதி பாகம்

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

தொல்காப்பியம்.

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

விஷ்ணுகோபன்.

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

சுமேரிய நாகரீகம்.

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

கௌதமபுத்தர்.

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

15 பகுதிகள்.

00000000000000000000000

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

3ஆம் நந்திவர்மன்.

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

19 ஆம் நூற்றாண்டு.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது?

74 கி .மீ.

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

14000 வகைகள்.

0000000000000000000000000000

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

பூரிக்கோ.

02 இலக்கியத்தில் “கவரி வீசியகாவலன் ” எனப் போற்றப்படும் மன்னன் யார்?

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒருவருக்கு “பிரச்னை ” என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து.

05தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

000000000000000000000000000

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

சிந்தாதேவி.

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

சடையப்பவள்ளல்.

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

நம்பியாண்டார் நம்பி.

04 சேக்கிழாரின் இயற்பெயர் என்ன ?

அருண்மொழித் தேவர்.

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

00000000000000000000000000000

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை

இருபத்தாறு.

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை – 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

இந்திர பிரஸ்தம்.

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

வினாக்கள் ஆறுவகைப்படும் .

  1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை ?

விடைகள் எட்டு வகைப்படும்.

  1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.

00000000000000000000000

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

போர்.

02 எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

கலம்பகம்.

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

இரும்பு இல்லாததால்.

04 எந்த தாவரம் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

கிழாநெல்லி.

05 மனோதத்துவத்தில் “மனபிம்பம்” என்றால் என்ன ?

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

000000000000000000000000

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

மனப்போரட்டம்.

02 மனநலமுடையோர் என்றால் யார் ?

தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் .

03 தமிழ் இலக்கணத்தில் “பால் ” எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

ஐந்து வகைப்படும் . ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று சொல்லப்படும் .

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

சர்க்கரை வியாதி.

May 12, 2014

(Visited 5 times, 1 visits today)