பொருட்பால் – அரசியல் – கேள்வி-Hearing-De l’audition-411-420

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 411

கேள்விச் செல்வமே மற்றையெல்லாச் செல்வங்களிலும் உயர்வானது. ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்களில் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும்.

எனது கருத்து:

இண்டையான் நிலமையிலை இந்தசெல்வத்தை பாக்கிறது கஸ்ரம். எல்லாத்துக்கும் ஆதாரம் கேக்கிற காலம் இப்ப. என்னைப் பொறுத்தவரையில ஒரு செய்தியை அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கவேணும். ஆனால் நானா நீயா அறிவிலை பெரிசு எண்ட ஈகோவால இந்த செல்வம் அல்லாடி, பெரிசாய் எடுபடுறேலை பாருங்கோ.

Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent.

La richesse des richesses est celle de l’oreille.
Elle est la première de toutes les richesses.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412

காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில் , வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும்.

எனது கருத்து:

இதை அவசியம் அத்தியாவசியம் எண்ட கோணத்திலை பாக்கவேணும். உலகத்திலை உள்ள மனிசருக்கு பசி எண்ட உணர்வுதான் அத்தியவசியம். அதுக்குப்பிறகுதான் கேள்வி எண்ட அவசியமான செவிக்கு உணவு .

When ’tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body’s need.

Quand l’oreille n’écoute pas, (quand elle n’a pas d’aliment) il faut offrir un peu d’aliment à l’estomac.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413

செவியுணவாகிய கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர் இந்நில உலகில் வாழ்பவராயினும், அவிர்பாகமாகிய உணவையுடைய தேவர்களுக்குச் சமமாவர்.

எனது கருத்து:

இந்த இடத்திலை ஒரு சமன்பாட்டை நிறுவிறார் ஐயன் . ஒருத்தன் குறைஞ்ச சாப்பாட்டோடை அறிவு ஞானம் கொண்டு சீவிச்சாலும் , அனுபவம் எண்ட கேள்வி ஞானம் கிடைச்சவனும் , இந்தப்படிச்சவனோடை சரிசமனாய் வைச்சு பார்க்கப்படுகறான் எண்டு சொல்லியிருக்கிறார்.

Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share.

Ceux qui ont l’aliment de l’oreille (écoutent) bien. qu’ils soient sur terre,
sont égaux aux dieux aux quels, l’aliment est offert dans les sacrifices.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414

ஒருவன் சிறந்த நூல்களைக் கல்லாதவனாயினும் அறிவுடையார் கூறுவனவற்றைக் கேட்டறிய வேண்டும் . அக்கேள்வியறிவு அவனுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும் போது ஊன்றுகோல் போல் துணைபுரியும்.

எனது கருத்து:

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். ஒருத்தன் பெரிசாய் படிக்காட்டிலும் படிச்சவனின்ரை கதையளைக் கேட்டாலே அவனுக்கு அது அவன் கஸ்ரப்படுகிற நேரத்தில உதவி செய்யும் கண்டியளோ.

Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay.

Que ceux qui ne sont pas instruits» écoutent ; ce sera pour eux un soutien dans le malheur.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.415

நல்லொழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் வழுக்குதலையுடைய நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் துன்பம்ஏற்படும் போது நம்மக்கு உதவி செய்யும்.

எனது கருத்து:

இப்ப மழை பெஞ்சு சேறாய்போய் கிடக்கிற நிலத்துக்கை எப்பிடி நடப்பியள்? தையா தக்கா நடனம் போடுவியள். அப்ப ஒருத்தர் கைபிடிக்கிற பொல்லு மாதிரி உங்களுக்கு கை தந்தால் எப்பிடியிருக்கும் உங்களுக்கு ? அப்பிடித்தான் படிச்சவன் பெரியவன் சொல்லிற கதையளும் கஸ்ரமான நேரத்திலை கைகுடுக்கும் கண்டியளோ.

Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways.

Telles que le bâton qui empêche de glisser dans la boue,
les paroles des hommes vertu eux servent de soutien.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416

ஒருவன் மிகச்சிறிய அளவினதாயினும் நன்மைதரும் சான்றோர் வாய்ச்சொல்லைக் கேட்க்கவேண்டும் . அது சிறிதாயினும் அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.

எனது கருத்து:

இது எப்பிடி எண்டு எனக்கு விளங்கேலை . எங்களுக்கு 25 பேருக்கு கிட்ட நல்லதைதான் சொல்லீச்சினம் . எங்களுக்கு பெருமையா கிடைச்சுது ?

Ecoutez les bonnes paroles, si peu nombreuses soient-elles. Elles procurent une grande dignité, proportionnée à leur petit nombre.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417

நுட்பமாக ஆராய்ந்து தேடிய அறிவினோடு கேள்வியறிவும் உடையபவர்கள் , ஒரு பொருளைத் தவறாக உணர்ந்தாலும் அறிவீனமான சொற்களைக் கூறமாட்டார்கள் .

எனது கருத்து:

இதை எங்கட பெரிசுகள் ” நிறைகுடம் தளும்பாது ” எண்டு சொல்லுங்கள். படிச்சவன் ,வாழ்கை அனுபவஞானம் உள்ளவன் தான் கேள்விப்பட்ட விசையம் பிழையாய் இருந்தாலும் , பொது இடங்களிலை லூசுக் கதையள் கதைக்க மாட்டான்.

Not e’en through inadvertence speak they foolish word, With clear discerning mind who’ve learning’s ample lessons heard.

Ceux qui ont examiné et saisi le sens délicat ( des choses ) et qui en ont discuté avec les sages ne disent pas des paroles qui trahissent l’ignorance, même lorsqu’ils ont mal compris.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418

சான்றோர் கூறும் நூற்பொருளைக் கேட்டலால் நலம் பெறாத காதுகள் , கேட்க்கும் இயல்பினவே ஆனாலும் செவிடான தன்மை உடையனவாகவே மதிக்கப்படும்.

எனது கருத்து:

நாங்கள் சிலபேரை பாத்து கேப்பம் ” உனக்கு மண்டையுக்கை ஏதாவது இருக்கோ?” எண்டு. ஏனெண்டால் அவன் மூளை இருந்தும் அதை பாவிக்காமல் இருக்கிறதாலை இப்பிடி கேப்பம். அதைமாதிரித்தான் காது இருந்தும் கேள்வியறவு இல்லாட்டில் அவனை செகிடன் எண்டு சொல்லிறம்.

Where teaching hath not oped the learner’s ear, The man may listen, but he scarce can hear.

L’oreille où n’a pas pénétré l’enseignement entend des sons mais est insensible en réalité.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419

நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பிறரிடம் பணிவுடன் கூடிய சொற்களைக் கூறுதல் இயலாது.

எனது கருத்து:

இப்ப அரைவாசி தண்ணி இருக்கிற செம்பு எந்த நேரமும் சளக்குப் புளக்கு எண்டு சத்தம் போட்டு , மற்றவனின்ரை பிறசறை ஏத்திக் கொண்டு இருக்கும். ஆனல் இந்த நுட்பம் எண்ட தண்ணி நிரம்பின செம்பு ஆடாமல் அசையாமல் அமைதியாய் இருக்கும். இதைத்தான் பெரிசுகள் சொல்லுவினம் நிறைகுடம் தளும்பாது எண்டு கண்டியளோ.

‘Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard.

Ceux qui n’ont pas l’oreille délicate ne peuvent avoir le langage respectueux

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420

காதுகளால் கேட்டறியும் சுவைகளைக் கேட்டு உணர்ந்து கொள்ளாமல் , வாயால் சுவைத்து உண்ணப்படும் சுவைகளையே அறிந்த மக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு நன்மை ஒன்றும் இல்லை.

எனது கருத்து:

கேள்விஞானமும் வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் , வெறுமன வண்டி வளர்க்கிறதுதுக்கு மட்டும் சீவிக்கிற சனங்களாலை சிவசத்தியமாய் ஒரு பிரையோசனமும் இல்லை. இப்பிடியான ஆக்கள் இருக்கிறதும் ஒண்டுதான் செத்துபோறதும் ஒண்டுதான்.

His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live?

Qu’importe que ceux qui ne connaissent pas les délices de l’oreille mais seulement le goût du palais, meurent ou vivent ?

 

 

 

 

 

 

 

(Visited 3 times, 1 visits today)