யார் இலக்கியப் போலிகள் ? அ.யேசுராசா என் மீது வைத்துள்ள அவதூறுக்கு எதிர் வினை

கவிஞர் கருணாகரன் தாயகம் மற்றும் தேனியில் எழுதிய ‘இலக்கிய போலிகளும் அரசியற் போலிகளும்’ என்ற கட்டுரை தொடர்பாகவும் முகநூல் உட்பெட்டி மூலம் கவிஞர் கருணாகரன் மீது அவதூறு பரப்பி வந்த அ.யேசுராசா, அந்த அவதூறு தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பொதுவெளியில் பதிந்திருந்தார். அதற்கு நானும் எனது எண்ணப்பாடுகளைப் பொதுவெளியில் பதிந்திருந்தேன். அது இவ்வாறாக அமைந்தது :

” அ யேசுராசாவின் தன்நிலை விளக்கம் தொடர்பாக…….

கருணாகரனின் கட்டுரை தொடர்பாக அ.யேசுராசாவின் பதில் வாசிக்க கிடைத்தது. அ.யேசுராசாவில் நான் என்றுமே மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன், வைத்திருக்கின்றேன். இப்பொழுது, எனக்கு அவரது இன்றய பதில் மிகவும் அயர்ச்சியை தருகின்றது. கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து அ யேசுராசாவுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ? அய்யா உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய நீங்களே அறம் பிறழ்ந்து நடக்கலாமா? இங்கு யார் கருப்பு வெள்ளை என்பதல்ல பிரச்சனை ஒருவர் பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ? நீங்கள், அலை,திசை,கவிதை,தெரிதல் மூலம் தமிழ் எழுத்துப்பரப்புக்கு ஆற்றிய பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை அதேவேளையில் நீங்கள் செய்வதெல்லாம் சரி என்றும் என்னால் எடுக்கமுடியவில்லை. நீங்கள் என்னை பேசவும் கண்டிக்கவும் பூரண உரிமையுண்டு ஆனால் உங்கள் அறம் பிறழ்ந்த செய்கையை என்னால் ரசிக்க முடியவில்லை”.

பிற்குறிப்பு : இதனை நீங்கள் கருணாகரனுக்கான ஆதரவுப் பதிவு என்று எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளியில்லை.

கோமகன்

000000000000000000000

எனது இந்தப் பதிவுக்கு அ. யேசுராசா எனது முகநூல் உட்பெட்டியில் இவ்வாறாகப் பதிலளித்திருந்தார் :

“எப்போதும், “கொளுவிவிட்டுக் கூத்துப் பார்க்க விரும்புகிற” உங்களுக்கெல்லாம், அறம்சார்ந்த நிலைப்பாடு என ஒன்றும் இருக்கிறதோ! நல்ல நகைச்சுவை. எனது நட்புப் பட்டியலில் இருக்கத் தகுதியற்றதால், உங்களை அதிலிருந்து நீக்குகிறேன்”!

என்னை அவர் நட்பாக வைத்திருப்பது, விடுவது அவரது சுதந்திரம். ஆனால் எனது கேள்விகள் நிலுவையில் நிற்கின்றது அய்யா. அத்துடன் புதிதாக என் மீதும் ஒரு அவதூறை கிளப்பியிருக்கின்றார் அ. யேசுராசா. அவரது சித்து விளையாட்டுகள் அம்பலமான நிலையில் தவறுக்கு மேல் தவறுகள் விடுகின்றார் என்றே எண்ண வேண்டியுள்ளது. இந்த எதிர்வினையின் மூலம் பொதுவெளியில் அ.யேசுராசாவிடம் 03 கேள்விகளை நான் முன் வைக்கின்றேன்.

01 கவிஞர் கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து உங்களுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ?

02 ஒருவர் உங்களை பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ?

03 அய்யா உங்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகியது . நான் எங்கே எப்பொழுது உங்கள் இருவரையும் கொளுவி விட்டு கூத்துப் பார்த்தேன் ?

அய்யா இறுதிக்கு கேள்வி மிகவும் முக்கியமானது. உங்களை நீங்கள் ‘புனிதப்படுத்துவதற்காக’ எதுவரைக்கும் இறங்கத்தயாராக உள்ளீர்கள் என்பதனை நீங்கள் எனது உள் பெட்டியில் எழுதி நிரூபணம் செய்து விட்டீர்கள். இத்தகைய ‘கீழ்மை இலக்கிய அரசியலால்’ இதுவரையில் ஈழத்து தமிழ் எழுத்துப் பரப்பிற்கு நீங்கள் வைத்த வைத்திருக்கின்ற வகிபாகம் கேள்விக்குறியாகின்றது. உங்கள் கீழ்மையான அறம்பாடலுக்கு நீங்கள் எழுதிய ‘நினைவுக்கு குறிப்புகள்’ நூலே தக்கசான்றாகும். அதில் ‘ஐயர்’ தவிர்ந்து நிலாந்தனில் இருந்து வயது பேதம் பாராது அனைத்து எழுத்தாளர்களையுமே நீங்கள் அறம்பாடி தள்ளியிருந்தீர்கள். அதாவது உங்களை புனிதப்படுத்தி சக எழுத்தாளர்களையும் அவர்களது உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி இருந்தீர்கள்.

அய்யா நீங்கள் தமிழையும் எழுத்தையும் உண்மையிலேயே நேசிப்பவராக இருந்தால் எனது 3 கேள்விகளுக்கும் பொதுவெளியில் பகிரங்கமாகப் பதில் தாருங்கள். நன்றி வணக்கம்.

கோமகன்

28 ஆடி 2019

தொடர்புபட்ட இணைப்பு : http://theneeweb.net/?p=8198&fbclid=IwAR3P8LNpgpT1mh1hHREsYo4R7YylF0Sl_onOUmOVuSTfolCOHt_9QPjERp0

(Visited 20 times, 1 visits today)