மகளிர் தினம் ஓர் நோக்கு – கட்டுரை

சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம் , எட்டு மணித்தியால வேலை , வாக்குரிமை , பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ் பிளாங்க் மூலம் பெண்களின் அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றய கால கட்டத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல் ,பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகள் உறுதி செய்துகொண்டுதான் இருக்கின்றன. தந்தை வழி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஆசிய சமூகம் இந்த விடயங்களில் தீவிரப்போக்கை கொண்டிருக்கின்றது. என்னதான் பாரதியும் பெரியாரும் தொண்டைகிழியக்கத்தினாலும் ஆண் சமூகத்தின் உளப்பாங்கில் பெரிய மாற்றங்கள் வரவில்லை.

ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்ஸிலும் இதே நிலை தான் தொடர்கின்றது. குடும்ப வன்முறைகளும் சிறுவர் பாலியல் வன்புணர்வுகளும் அதிகரித்த படியே இருக்கின்றன. பிரான்ஸின் குடும்ப வன்முறை பற்றி சமீபத்தைய புள்ளிவிபரங்கள் 10 நாட்களுக்கு ஒரு பெண் இறப்பதாக சொல்கின்றது. இந்தக்குடும்ப வன்முறைகள் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் அதிகரித்துள்ளதாக சொல்கின்றது. என்னைப்பொறுத்தவரை யில் வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் ,மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது புலம்பெயர் தேசத்து ஆசிய சமூகத்தில் மாறுகின்றதோ அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம்.

நீண்ட பெரும் போரை சந்தித்த தாயகத்தில் கூட பெண்களின் நிலை ஆரோக்கியமானதாக இல்லை. ஒருகாலத்தில் போரை முன்னெடுத்த பெண் போராளிகளை தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமூகம்ததான் இன்று அவர்களை அனாதைகளாக தெருவில் விட்டு பாலியல் தொழிலார்களாகப் பார்க்கின்றது. ஆக மொத்தத்தில் இந்தப்போரானது எமது பண்பாட்டுத்தளத்தில் பாரிய மாற்றத்தினைக் கொண்டுவரவில்லை. போர் நடைபெற்ற பொழுதில் மகளிர் சகல மட்டத்திலும் விடுதலையடைந்து இருந்தார்களே என்ற கேள்விக்கு அது ஓர் சந்தர்ப்பவாத முன்னெடுப்பாகவே என்னால் கருதக் கூடியதாக இருக்கின்றது.

பெண்களின் விடுதலைக்கு உண்மையில் ஆண்கள் மட்டுமா தடையாக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பங்குடன் குறிப்பிட்டளவு பெண்களும் தடைகளாக இருக்கின்றார்கள் என்பேன். நான் செய்த நேர்காணல்களில் பல மகளிர்கள் பெண்விடுதலைக்கு பெண்களே முக்கிய எதிரிகளாக இருக்கின்றார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள். விடுதலை அல்லது சுதந்திரம் என்பது யாசித்துப் பெறுவதல்ல மாறாக அது உளரீதியிலான மாற்றங்களுடன் எதிர்தரப்புக்கு வழங்கப்படுவது. எங்களுடன் கூட வருகின்ற பெண்ணை ஓர் சக உயிரியாக அவளுடைய உணர்வுகளை மதிக்கின்ற உளவளத்தை ஆண்தரப்பு ஏற்படுத்த வேண்டும். ஓர் குடும்பத்தில் அம்மா என்ற பெண்ணாலயே அந்தக்குடும்ப அங்கத்தவர்கள் வளர்க்கப்படுகின்றார்கள். பாலியியல் அவமதிப்புகள் அல்லது வேறுபாடுகளை அம்மா என்ற கதாபாத்திரம் தூக்கி உடைக்குமானால் பெண்ணானவள் சுதந்திரமாக உலாவருவாள்.அவள் வருங்காலங்களில் அவளது இருப்பு அங்கீகாரம் போன்றவற்றில் விடுதலையடைந்து இருப்பாள்.

(Visited 6 times, 1 visits today)