தமிழர் பழக்கவழக்கங்கள்-கட்டுரை

தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களையும் அவைகளைப் பற்றிய சில விளக்கங்களையும் தரலாம் என நினைக்கின்றேன் நாம் யாரையாவது சந்திக்கும்பொழுது இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறோம் அதாவது இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும்.

எம்மிலும் பார்க வயதில் பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல்.

காலணிகளை வெளியே கழட்டிவிட்டு வீட்டிற்குள் உள்ளடதல் முறையும் குறிப்பிடத்தக்கது வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.

மேலும் வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு.

அத்துடன் ஒப்பீட்டளவில் மேற்கு நாட்டோருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் பொதுவாக உணர்சிவயப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.உதாரணமாக செத்த வீட்டில் ஓவென நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது இதற்கு ஒர் நல்ல எடுத்துக்காட்டு.

தமிழர்கள் நேரம் தொடர்பாக இறுகிய கட்டுப்பாட்டை அற்றவர்கள். அதாவது ஒரு நிகழ்ச்சி 6 மணிக்கு என்று அறிவித்தால் அது 6:45 ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது பொதுவாகத் தமிழர்களுக்கிடையேயான நிகழ்வுகளுக்கே பொருந்தும்.

December 13, 2011

(Visited 6 times, 1 visits today)